சென்னை -கல்கத்தா ரயில் பாதை மின்மயமாகிறது
திருச்சி:
நாட்டில் உள்ள 62 ஆயிரம் கிலோமீட்டர் நீள ரயில் பாதையில் 24 சதவீதம் மட்டுமேமின்மயமாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே வாரிய உறுப்பினர் என்.கே. சிதம்பரம்தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியா முழுவதும் மொத்தம் 62 ஆயிரம் கிலோமீட்டர் நீள ரயில் பாதை உள்ளது.ரயில் பாதை முழுவதையும் மின்மயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு 500 கிலோமீட்டர் நீள ரயில் பாதை மட்டுமேமின்மயமாக்கப்பட்டு வருகிறது. இதுரை 24 சதவீதம் ரயில்பாதைதான்மின்மயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது கல்கத்தா-மும்பை, ஹெளரா-டெல்லி, டெல்லி-மும்பை, மும்பை-கல்கத்தா,சென்னை-கல்கத்தா ஆகிய முக்கிய ரயில்பாதைத் தடங்கள் மின்மயமாக்கப்பட்டுவருகின்றன. அடுத்த இரு ஆண்டுகளில் இப் பணி முடிந்துவிடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வேயை நவீனமாக்க ரயில்வே வாரியம் பல்வேற திட்டங்களைத் தீட்டியுள்ளது.அவற்றை நிறைவேற்ற மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. ரயில்வேயில் சிக்னல்மற்றும் தொலைத் தொடர்பு முறையை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.400 கோடிசெலவிடப்பட்டு வருகிறது.
சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு முறை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் அனலாக்மைக்ரோவ் முறைக்குப் பதிலாக டிஜிடல் மைக்ரோவ் முறை அமல்படுத்தப்பட்டுவருகிறது. விரைவில் இப் பணி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப் பணி முடிந்துள்ள பெங்களூர், மைசூர், திருச்சி, மதுரை பகுதிகள் ஏற்கெனவேசென்னையுடன் டிஜிடல் மைக்ரோவ் முறையில் இணைக்கப்பட்டுள்ளன என்றார்சிதம்பரம்.
யு.என்.ஐ.