For Daily Alerts
Just In
எம்.எல்.ஏ.வுடன் மோதல்: அமைச்சர் மீது வழக்கு
கோவை:
கோவையில் எம்.எல்.ஏ.வுடன் நடந்த மோதலில் தி.மு.க. அமைச்சர் மீது நான்குபிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவையில் தி.மு.க. கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. அமைச்சர்பழனிச்சாமியும், எம்.எல்.ஏ. தண்டபாணியும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் மீது தண்டபாணி கோஷ்டியினர் போலீஸில்புகார் செய்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், அமைச்சர் பழனிச்சாமி மீதுவழக்கு பதிவு செய்தனர்.
பிரிவுகள் 323 (கையால் தாக்குதல்), 355 (செருப்பால் அடித்து அவமானப்படுத்துதல்),506 (2) (மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் அடிதடியில் இறங்கிய அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் முதல்வர்கருணாநிதியைச் சந்தித்து முறையிட சென்னைக்குச் செல்கின்றனர்.
Comments
Story first published: Wednesday, November 1, 2000, 5:30 [IST]