மேட்ச் பிக்ஸிங்கில் அசாருக்குத் தொடர்பு - சிபிஐ அறிக்கையில் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மேட்ச் பிக்ஸிங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்குத்தொடர்பு இருப்பது சிபிஐயின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக மத்தியஅமைச்சர் தீன்ஷா தெரிவித்தார்.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக மத்திய அரசின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணைநடத்தியது. கடந்த 6 மாதமாக நடந்த விசாரணையின் முடிவில் சில நாட்களுக்கு முன்தனது விசாரணை அறிக்கைய மத்திய அமைச்சர் தீன்ஷாவிடம் சிபிஐ ஒப்படைத்தது.

முதலில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில்போது நாடாளுமன்றதில்அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தீன்ஷா தெரிவித்தார். ஆனால், பிரதமர்வாஜ்பாயியைச் சந்தித்தபிறகு, இரண்டு நாளில் சிபிஐ அறிக்கை வெளியிடப்படும்என்றார் அவர்.

இந் நிலையில், சிபிஐயின் விசாரணை அறிக்கையில் மேட்ச் பிக்ஸிங்கில்அசாருதீனுக்குத் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதேநேரத்தில், மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு கூறப்பட்ட கபில் தேவ் மீது அக் குற்றம்நிரூபிக்கப்படவில்லை என்றார் அமைச்சர் தீன்ஷா.

மேற்கொண்ட தகவல் ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்ட அவர், அறிக்கையவெளியிடப்பட்ட உடன் அனைத்து விஷயங்களும் வெளியாகும் என்றார்.

இதற்கிடையே சிபிஐயின் விசாரணை அறிக்கையில் அசாருதீன் தவிர அஜய் சர்மா,மனோஜ் பிரபாகர், நயான் மோங்கியா, அஜய் ஜடேஜா ஆகியோரது பெயரும், இந்தியஅணியின் முன்னாள் பிசியோதெரபிஸ்டாக இருந்த அலி இராணி ஆகியோரதுபெயரும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தவிர ஆஸ்திரேலியாவின் மார்க் வாவ், டீன் ஜோன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள்அணியின் பிரையன் லாரா, பாகிஸ்தானின் சலீம் மாலிக், இங்கிலாந்தின் அலெக்ஸ்டீவர்ட் உள்பட 7 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் பெயர்களும் அந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில்மேற்கண்ட 7 வெளிநாட்டு வீரர்களும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தெரியவந்ததுஎன்று சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் குறைந்தது ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5லட்சம் வரை பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அசாருதீன்தான் நிறையகிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நிறைய பணம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில், சிபிஐ அறிக்கை வெளியானவுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ளவீரர்கள் மீது அவர்கள் செய்த தவறின் தன்மையின் அடிப்படையில் தண்டனைவழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+