காவிரி, வைகை ஆறுகளைத் தூய்மையாக்க ரூ. 254 கோடி
சென்னை:
திருச்சியிலுள்ள காவிரி ஆறு மற்றும் மதுரையிலுள்ள வைகை ஆற்றிலுள்ள மாசுக்களைச் சுத்தப்படுத்த மத்திய அரசுரூ. 254 கோடி நிதியுதவி ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறைஅமைச்சர் ஜக்மோகன், மத்திய சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர்கள், மத்திய,மாநில உயர்அதிகாரிகள் ஆகியோர் அக்டோபர் 12 மற்றும் 13 ம் தேதிகளில் திருச்சி மற்றும் மதுரைக்குச்சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள்.
திட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் விவாதிக்கப்பட்டது. இந்தக்கூட்டத்தில் மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சரின் ஆலோசகர் சர்மா, தமிழக வனத்துறை மற்றும் சுற்றுப்புறச் சூழல்செயலாளர் ரங்கரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் காவிரி ஆற்றை சுத்தப்படுத்த ரூ 150 கோடி ரூபாயும், வைகை ஆற்றைச் சுத்தப்படுத்த ரூ 104கோடியும் ஒதுக்கப்படும் என்றும், பல தனியார் அமைப்புக்களை அணுகி இத்திட்டத்திற்காக நிதியுதவி செய்யுமாறுகேட்டுக் கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.
யு.என்.ஐ.