For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

35-ஐக் கொன்ற 83

By Staff
Google Oneindia Tamil News

ஹம்பர்க் (ஜெர்மனி):

ஜெர்மனியில் மருத்துவமனையில், அதிகம் சப்தம் எழுப்பியதால், ஆத்திரமடைந்த 83 வயது நோயாளி, பக்கத்துபடுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயது நோயாளி கழுத்தை நெரித்துக் கொன்றார்.

வடக்கு ஜெர்மனியில் உள்ள எல்ம்ஷோர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்தது. இங்கு பலநோயாளிகள் உள்ளனர். இதில் அருகருகே இரு நோயாளிகள் இருந்தனர். இவர்களில் ஒருவருக்கு வயது 83.இன்னொருவருக்கு 35.

35 வயது நோயாளி அடிக்கடி சப்தம் எழுப்பிக் கொண்டிருந்திருக்கிறார். இது 83 வயது நோயாளிக்கு எரிச்சலைஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த அவர் பாண்டேஜ் துணியால் கழுத்தை நெரித்து 35 வயது நோயாளியைக்கொன்றார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த நர்ஸ் ஒருவர் படுக்கையில் நோயாளி இறந்து கிடப்பதைப் பார்த்துஅதிர்ச்சியடைந்தார். உடனடியாக டாக்டர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கொலையாளியான 83 வயது நோயாளி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நோயாளிகுறித்து போலீஸார் கூறுகையில், அவர் செனைல் டிமன்ஷியா என்று நோயால் அவதிப்பட்டு வந்தார் என்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X