For Daily Alerts
Just In
தலித், வன்னியர் வன்முறை .. 13 பேர் சரண்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கிருமம்பாக்கத்தில் தீபாவளி அன்று தலித் இனத்தவருக்கும், வன்னியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய 13 பேர்புதன்கிழமை போலீசில் சரணடைந்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் ஏற்கனவே 26 பேரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பல வீடுகள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்சேதமடைந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரு சமூகத்தையும் சேர்ந்த பிரதிநிதிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் எந்த வன்முறையும் ஏற்படாதவாறுபார்த்துக் கொள்வோம் என்று உறுதியளித்தனர். வன்முறையில் ஈடுபடுபவர்களை தாங்களே போலீசிடம் ஒப்படைப்பதாகவும் அவர்கள் கூறினர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, November 1, 2000, 5:30 [IST]