ராணுவத் தாக்குதலில் 50 விடுதலைப் புலிகள் சாவு
கொழும்பு:
யாழ்ப்பாணம் அருகே இலங்கை ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும்இடையே நடந்த மோதலில் 50 விடுதலைப் புலிகள் இறந்ததாக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் நான்கு ராணுவ வீரர்களும் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் அருகே எழுத்துமடுவல் என்ற இடத்தில் சனிக்கிழமை மாலை இந்தசண்டை நடந்தது.
எழுத்துமடுவல் பகுதியில் விடுதலைப் புலிகள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை5.30 மணியளவில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்களும் பதில்தாக்குதலில் இறங்கினர்.
மோதலின் இறுதியில் 50 விடுதலைப் புலிகள் இறந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறு வயதினர் என்று தெரிகிறது. இரண்டு மணிநேரம் இந்த சண்டை நீடித்தது.
இதற்கிடையே, தென் மராச்சி மற்றும் வட மராச்சி பகுதிகளில் விடுதலைப் புலிகள்தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்து பொதுமக்கள்பாதுகாப்பான இடம் நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர் என்று விடுதலைப்புலிகளின் ரேடியோ கூறியுள்ளது.
அமைச்சர் உயிர் தப்பினார்
இதற்கிடையே, கிழக்கு மட்டக்களப்பு பகுதியில் காவல்கேட்பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை துணை அமைச்சர் ஒருவர் காயமின்றி உயிர்தப்பினார்.
அமைச்சர் காரில் வந்து கொண்டிருந்தபோது கார் வரிசையின் மீது விடுதலைப் புலிகள்வெடிகுண்டு வீசியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதில் காயமடைந்த அமைச்சரின் பாதுகாவலர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications