இன்டர்நெட்டில் கால் வைக்கும் அலிகள்
போபால்:
இன்டர்நெட்டில் கால் வைத்துள்ளனர் அலிகள் எனப்படும் அரவாணிகள்.
ஆணும் இல்லாமல், பெண்ணும் இல்லாமல் இனம் பிரிக்க முடியாத நிலையில்உள்ளவர்களை இந்தியாவில் அலிகள் என்று அழைக்கிறார்கள். தென் இந்தியாவில்அலிகளுக்கு அவ்வளவு மரியாதை இருப்பதாக கூற முடியாது. கேலிப் பொருளாகவும்,போகப் பொருளாகவும் மட்டுமே இவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.
வட இந்தியாவில் அலிகளின் நிலையே வேறு மங்கலகரமான காரியங்களில் அலிகள்வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. நல்ல கெளரவமானநிலையில் வட இந்திய அலிகள் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தஷப்னம் மெளஸ்மி என்ற அலி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
இப்போது அலிகளுக்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. தங்களுக்கென ஒருஇன்டர்நெட் தளத்தை அலிகள் துவக்கியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபால்நகரில் இதற்கான விழா நடந்தது.
மத்திய பிரதேச மாநில முதல்வர் திக் விஜய் சிங் வெள்ளிக்கிழமை இரவு நடந்தநிகழ்ச்சியில், இன்டர்நெட் தளத்தைத் துவக்கி வைத்தார்.
அலிகள் குறித்த முழு விவரங்களும் இந்தத் தளத்தில் உள்ளது. அவர்களது பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, திருவிழாக்கள், மரபுகள் ஆகியவை குறித்துவிலாவாரியாக இந்த இன்டர்நெட் தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஷப்னம் மெளஸ்மி குறித்த சிறப்பு பகுதியும் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த தளத்தின் பெயர் www.kinnar.com