For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியேற்ற அனுமதி கோரி 100 இந்தியர்கள் நியூசிலாந்தில் உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

வெலிங்டன் (நியூசிலாந்து):

நியூசிலாந்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் சீன அகதிகளுடன், தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட 100இந்தியர்களும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

தலைநகர் ஆக்லாந்தில் உள்ள முக்கியப் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சீன அகதிகள், தங்களுடன் சேர்ந்து போராட வருமாறு இந்தியமற்றும் பாகிஸ்தானிய அகதிகளுக்கு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நியூசிலாந்து அகதிகள் கவுன்சில் தலைவர் நாகலிங்கம் ராசலிங்கம்,100-க்கும் மேற்பட்ட இந்திய, பாகிஸ்தானிய அகதிகள், சீனர்களுடன் சேர்ந்து போராடுவார்கள் என்று நியூசிலாந்து பத்திரிகை ஒன்றில் செய்திவந்துள்ளது.

நியூசிலாந்தில் தங்க அனுமதி வழங்கக் கோரி 25-க்கும் மேற்பட்ட சீன அகதிகள் புதன்கிவமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களில் 4 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போராட்டம் குறித்து நியூசிலாந்து குடியேற்றத் துறை அமைச்சர் லியானே டால்சியல் கூறுகையில், நியுசிலாந்தில் 8000 க்கும் மேற்பட்டவெளிநாட்டினர் இங்கேயே 5 வருடத்திற்கு மேல் வாழ்ந்து, இங்குள்ளவர்களையே திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு வேண்டுமானால்நிரந்தரக் குடியுரிமை வழங்கலாம். ஆனால், பின்கதவு வழியாக, அதாவது அனுமதியின்றி வரும் பிறநாட்டினரை நியுசிலாந்து ஒருபோதும் ஏற்காதுஎன்றார்.

ஆனால் இதுகுறித்து நியுசிலாந்து அகதிகள் கவுன்சில் தலைவர் ராசலிங்கம் கூறுகையில், நியுசிலாந்துக்கு வரும் அகதிகள் தாஙகள் தங்குவதற்கு அரசுஉடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. குடியேற்றத்துறை விதிகளின் படியும், அமைச்சர் லியானே டால்சியல் கூறுவதுபோலவும் தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X