முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம் .. டாக்டர் கைது
சென்னை:
முதல்வர் கருணாநிதி வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற தஞ்சாவூர்மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர்டாக்டர் சொக்கலிங்கம் (76). இவர் திங்கள் கிழமை காலை கோபாலபுரத்தில் உள்ளமுதல்வர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
நாச்சியார்கோவிலில் போடப்பட்டுள்ள ஒரு வழக்கை உள்ளூர் போலீசாரிடமிருந்துசி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி முதல்வர் பிறப்பித்திருந்த உத்தரவை எதிர்த்து அவர்இந்த போராட்டத்தை அறிவித்திருந்தார்.
அதன்படி திங்கள் கிழமை காலை 11 மணியளவில் கோபாலபுரம் வீட்டின் முன்புஉண்ணாவிரதம் இருக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தபோலீசார் அவரை பிடித்தனர்.
கைது செய்து சிறையில் அடைக்க முயன்ற போலீசாரிடம், உடல் நலம்பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தப்பித்துக் கொண்டார். தற்போது அவர் ராயப்பேட்டைஅரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications