இலங்கை தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது
கொழும்பு:
இலங்கையில் அடுத்த வாரம் நடக்கவுள்ள தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிகிறது.
இனவெறியைத் தூண்டிவிட்டு பிரச்சாரம் செய்து வரும் ஜனதா விமுக்தி பெரமுனா, தேசிய சிங்கள உருமயாகட்சிகளுக்கும் இம்முறை அதிக வாக்குகள் கிடைக்கும் என கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவானால், புதிய ஆட்சி அமைவதில் இந்தஇரு கட்சிகளுக்கும் அதிக பங்கு இருக்கும். ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சியும், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியகட்சியும் இலங்கையில் உள்ள 22 மாவட்டங்களிலும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இவர்களுக்கு இணையாக ஜனதா விமுக்தி பெரமுனாவும், தேசிய சிங்கள உருமயா கட்சிகளும் அனைத்துத்தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகள் தவிர மேலும் 29 கட்சிகளும் 99 சுயேச்சை அமைப்புகளும்தேர்தல் களத்தில் உள்ளன.
சமீபத்தில் நடத்தப்பட்ட இருவேறு தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஆளும் கட்சியும், எத்க் கட்சிக் கூட்டணியும்முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
சர்வே ரிசர்ச் லங்கா என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் 45.6 சதவீத வாக்குகள் ஆளும் கட்சிக்கும் 40சதவீத வாக்குகள் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிடைக்கும் எனத் தெரியவந்தது.
ஆனால், ரிசர்ட் இண்டர்நேசனல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் இலங்கையின் எதிர்க் கட்சி 38.1சதவீத வாக்குகளையும் ஆளும் கட்சி 37.9 சதவீத வாக்குகளையும் பெறும் என்று தெரியவந்தது.
இந்த இரு மாறுபட்ட கருத்துக் கணிப்புகளும் இரு வேறு பத்திரிகைகளுக்காக நடத்தப்பட்டவை.
இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் இரு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, தொகுதிகளை கைப்பற்றுவதில் இந்தஇரு கட்சிகளுக்கும் இடையே அதிக வேறுபாடு இருக்கப்போவதில்லை. மற்றொன்று இந்த இரு கட்சிகள் மீதும்மக்கள் கடும் கோபத்தில் இருப்பதும் தெரியவருகிறது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர்.
இனப் பிரச்சனை தான் தேர்தலின் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
ஆளும் கட்சி, எதிர்க் கட்சி சண்டைக்கு இடையே ஜனதா விமுக்தி பெரமுனாவின் இனரீதியான பிரச்சாரத்துக்குஅதிக லாபம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications