For Daily Alerts
Just In
வங்கதேசத்தில் புயலில் சிக்கி 150 மீனவர்கள் சாவு
டாக்கா:
வங்காள விரிகுடா கடலில் வீசிய கடுமையான புயலில் சிக்கி வங்கதேசத்தைச் சேர்ந்த 150 மீனவர்கள் காணாமல் போய்விட்டனர். இவர்கள் அனைவரும்கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குதுப்தியா தீவிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற இவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வங்காளவிரிகுடாக் கடலில் வீசிய கடுமையான புயலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Tuesday, October 3, 2000, 5:30 [IST]