For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு தனியார் கல்லூரி மாணவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர்.

ஸ்ரீரங்கம் தீயணைப்புப் படை வீரர்கள் இதுகுறித்துக் கூறுகையில், சென்னையைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை அருகே காடியப்பட்டியில் நடந்ததிருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பின் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

அப்போது, இரண்டு மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்கள் பெயர் தனசேகர், சேலத்தைச் சேர்ந்தவர். ராஜசேகர், சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்தவர். இருவருக்கும் 20 வயதுக்குள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இவர்களில் ஆற்றில் மூழ்கிய இன்னொரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு விட்டார். அவரது பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை. ஆற்றில் மூழ்கிஇறந்த இரண்டு மாணவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X