எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு பஜனைப் பாடல்கள்
ஜோகன்னஸ்பெர்க்:
தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளில் பஜனைப் பாடல்கள் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில், கைஷா பார்க் ஆரம்பப் பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றி வரும் யோக பிரசாத் நாயுடு இதுகுறித்துக் கூறியதாவது:
லெனேசியா பகுதியில் வாழும் இந்தியர்களிடையே அதிக அளவு எய்ட்ஸ் நோய் பரவி வருகிறது. எய்ட்ஸ் நோய் பரவலைத் தடுக்க மதத் தலைவர்கள், தனியார்அமைப்புக்கள், கலாச்சார அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் மூலம், விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஊர்வலங்கள்ை ஆகியவற்றை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் இந்த பிரசாரம் நடத்தப்படும். பஜனைப் பாடல்கள், பக்திப்பாடல்கள் மற்றும் பல்வேறு எய்ட்ஸ் ஒழிப்பு பிரசார அமைப்புகளைச்சேர்ந்தவர்களின் உரைகள் மூலமாக பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
எய்ட்ஸ் கிருமி குறித்து பலூன்களை வானில் வெடித்து, அவை குறித்து மக்களிடம் விளக்கப்படும். எய்ட்ஸ் நோய் நமது சமுதாயத்தைச் சேர்ந்ததல்ல. நமக்கு எய்ட்ஸ்நோய் வந்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
எய்ட்ஸ் ஒழிப்புக்காக பள்ளிகள் தங்களது பங்கை அளிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க தேசிய எய்ட்ஸ் கவுன்சில் யோசனை தெரிவித்திருந்தது. அதையடுத்துஇந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டவுள்ளது என்றார் நாயுடு.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications