தாய்ப்பாலுக்கு அடுத்து சிறந்தது எது?

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளின் எண்ணங்களுக்குப் போய்ச் சேருவதுதாய்மொழி. தாய் மொழி மூலம் கற்கும் பாடம் எளிதாக மாணவர்களைச் சென்றடையும்என தமிழகக் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேசினார்.

சேலத்தில் பள்ளி சீரமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு எம்.எல்.ஏ. தங்கவேல்தலைமை வகித்தார். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்மாநாட்டு மலரை வெளியிட்டார்.

துவக்க விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

மன வளர்ச்சியை விட அறிவு முக்கியமானது. அறிவு வளர்ச்சி பெற குழந்தைகளுக்குத்தன்னம்பிக்கை தேவை. அதற்கு கல்வியில் இனிமை சேர்க்க வேண்டும்.

குழந்தைகளிடையே படிக்கும் ஆர்வத்தை வளர்க்க, ஆசிரியர்கள் பொய்யான பலகதைகளைச் சொல்லலாம். நமது இதிகாசங்கள் பொய் சொல்லும்போது ஆசிரியர்கள்பொய் சொல்வதில் தவறு இல்லை.

குழந்தைகளிடம் கல்வி கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவது ஆசிரியரின் கடமை.ஆசிரியர்கள் ஓடியாடி, நடனமாடி மகிழ்வோடு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும்.

சம்பளத்திற்கு வேலை செய்வது என்றால், அது பணத்திற்கு அடிமை என்பதாகும்.சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை என்ற பூரிப்போடு பாடம் நடத்த வேண்டும்.சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகளுக்கு ஒப்பானவர்கள் ஆசிரியர்கள்.

கல்வி வழங்குவது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமை என உணரும்போதுகல்வித் தரம் உயரும். கற்போரின் எண்ணிக்கையும் உயரும்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நிறைய பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.பல பள்ளிகளின் நிலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நாலரை ஆண்டுகளில் 500நடுநிலைப் பள்ளிகள், 300 உயர்நிலைப் பள்ளிகள், 250 மேல்நிலைப் பள்ளிகள்துவக்கப்பட்டுள்ளன.

முன்பு கல்வி மேல் ஜாதிக்கார்கள், பணக்காரர்கள் ஆகியோருக்கு மட்டும் தான் என்ற நிலைஇருந்து வந்தது. தற்போது இந்த நிலை மாறி விட்டது. அனைவரும் கல்வி கற்றாகவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் கல்வி என்பது ஜனநாயகக்கடமை.

அன்பு இருக்கும் இடத்தில் ஆண்டவன் இருக்கிறான். ஆட்சியில் இருந்துகொள்ளையடிப்பவர்களைக் கண்டால், ஆண்டவனே தூக்கு மாட்டிக் கொள்கிறான்.கடவுளை உணர, வஞ்சம், புகழ்ச்சி, சூழ்ச்சி இல்லாதவனாக மனிதன் இருக்க வேண்டும்.இரக்கமுள்ளவனாக இருக்க வேண்டும்.

தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளின் மனதைச் சென்றடைவது தாய்மொழி.ஆங்கிலம் படித்தவர்கள் முன்னேறுவது உண்மை. ஆனால் அவர்கள் எல்லோரும்குழந்தைப் பருவத்திலிருந்து ஆங்கிலம் கற்றவர்கள் அல்ல. வயது வந்தவுடன் படித்தவர்கள்அவர்கள். சில பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இப்படிச் செய்பவர்கள் சூடுசொரணையற்றவர்கள்.

ஆசிரியர்கள் குறை உள்ளத்தோடு பணியாற்றினால் நிறைவடையாது. ஆசிரியர்கள் மனநிறைவோடு பணியாற்ற வேண்டும். அப்போது தான் தமிழகம் முன்னேறும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+