ஜெ.வுக்குச் ஜோசியம் சொன்னார் .. வந்தது மவுசு
மதுரை:
ஜெயலலிதா பிரபல ஜோசியர் ஒருவரிடம் ஜோசியம் பார்த்தத்ை தொடர்ந்து பலஅ.தி.மு.க. தலைவர்கள் அந்த ஜோசியரை பார்க்க அலை மோதுகின்றனர்.
அ.தி..மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தற்போது தமிழக தென் மாவடங்களில்சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சென்ற திங்கட்கிழமை மதுரையில் வசிக்கும் பிரபலசோழி ஜோதிடர் ரவீந்திரன் என்பவர் ஜெயலலிதாவுக்கு அதிகாலை 5 மணியளவில்சென்று சோழி போட்டுப் பார்த்து ஜோசியம் சொல்லிவிட்டு வந்தார்.
இந்த ஜோதிடத்தின் சிறப்பம்சம், அதிகாலையில் சூரிய உதயத்தின் போதுதான் இந்தஜோசியம் பார்க்கப்படும். இதன் காரணமாக இதற்கு பிரசன்ன ஜோதிடம் என்ற பெரும்உண்டு.
இந்த ஜோசியர் சோழி போட்டு பார்த்து ஜெயலலிதாவிற்கு அரசியல் எதிர்காலம்பிரகாசமாக இருக்கிறது வழக்குகளினால் எந்த பாதிப்பும் வராது. மேலும் அவர்தேர்தலில் நிற்பதற்கு எந்த விதமான தடையும் இருக்காது எனக் கூறியதாக தெரிகிறது.
அவரிடம் சசிகலா எதிர்காலம் குறித்தும் ஜோசியம் கேட்கப்பட்டது. அவருக்கும்அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என அவர் கூறினாராம்.
அதிமுகவின் அடுத்த வாரிசு தினகரனின் மனைவி அனுராதா, அவரது தம்பிவெங்கடேஷ் என குடும்பத்துக்கே ஜோசியம் கேட்கப்பட்டுள்ளது. அவரின் பதிலைப்பொறுத்து வெங்கடேஷின் அரசியல் பிரவேசம் முடிவு செய்யப்படுமாம்.
ஜெயலலிதாவிற்கு ரவீந்திரன் ஜோசியம் பார்த்ததைத் தொடர்ந்து பல அ.தி.மு.க.தலைவர்களும் அவரிடம் ஜோசியம் பார்க்க அலை மோதுகின்றனர்.
நிறைகுளத்தான், ஓ.எஸ். மணியன் இருவரும் தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்துஜோசியம் பார்த்துள்ளனர். சீனிவாசன் எம்.பி.யும் ஜோசியரிடம் "டைம்கேட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications