இந்தியா வருகிறார் சந்திரிகா
டெல்லி:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரிகா, பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.வாஜ்பாயும், சந்திரிகாவின் தாயாரும், உலகின் முதலாவது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருமானஸ்ரீமாவோவின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
இந்த உரையாடலின்போது, இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையிலும், அங்கு அமைதியைஏற்படுத்த தான் எடுத்துள்ள அனைத்து முயற்சிகள் குறித்தும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா,வாஜ்பாயிடம் தெரிவித்தார்.
இந்த தொலைபேசி உரையாடல் குறித்து, பிரதமர் வாஜ்பாயின் பத்திரிக்கை ஆலோசகர் எச்.கே.துவா கூறுகையில்,இந்தியா, இலங்கைக்கு இடையே ஏற்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்துவதுகுறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
தொலைபேசி உரையாடலின் போது வாஜ்பாய், சந்திரிகாவை இந்தியாவுக்கு வரும்படி, அழைப்பு விடுத்தார். அதைசந்திரிகாவும் ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை அதிபர் சந்திரிகா, இந்தியாவுக்கு வரலாம்என்றார் துவா.
யு.என்.ஐ.