பிரிந்து சென்றவர்கள் சேர்ந்தால் நல்லது .. த.மா.கா
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து, பிரிந்து சென்றவர்கள், தங்கள் எம்.எல்.ஐ.ஏ.பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றுபாண்டிச்சேரி த.மா.கா. வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பாண்டிச்சேரி த.மா.கா. எம்.எல்.ஏ.பாலாஜி நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாண்டிச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தற்போது கட்சியிலிருந்து பிரிந்துசென்றுள்ளனர். அவர்கள் தங்களது எம்.எல்.ஏ.பதவிகளை ராஜினாமா செய்தால் தான் அரசியல் ஸ்திரத்தன்மையும், நல்லாட்சியும் ஏற்படும்.
கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் கட்சியின் வளர்ச்சிக்காகவும், மாநிலத்தின் நன்மைக்காகவும் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில்சேர்ந்தால் நல்லது.
இதுகுறித்து ஆலோசிப்பதற்காக தலைவர் மூப்பனார் ஏற்கனவே 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் பாண்டிச்சேரி பிரிவு தலைவராக இருந்த கண்ணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அவர்கட்சியிலுள்ள பிற எம்.பி.க்களைப் பற்றிக் குறை கூறி வருகிறார். இதுகுறித்து மூப்பனாரிடம் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் விரைவில் கண்ணன் மீதுநடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார் பாலாஜி.
யு.என்.ஐ.