ஜெ.வுக்கு நாக்கில் சனி .. கூறுகிறார் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஜெயலலிதா தன்னைத் தானே அழித்துக் கொள்வார். நாம் அவசரமோ ஆத்திரமோ அடைய வேண்டியதில்லை.அவரது நாக்கில் சனி பிடித்து ஆட்டுகிறது என மாநில கைத்தறித் துறை அமைச்சர் பெரியசாமி பேசினார்.

ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையத்தில் அ.தி.மு.க.,வைக் கண்டித்து தி.மு.க. கண்டனப் பேரணி நடத்தியது.இந்தப் பேரணியில் மாநில கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது செய்த தவறுகளுக்கு மக்கள் மட்டுமல்ல, நீதிமன்றமும் கூட தீர்ப்பு வழங்கிவிட்டது. அவர் செய்த ஊழலுக்கு மக்கள் அளித்த தண்டனையை அனுபவித்து வருகிறார்.

தற்போது அரசியலின் இறுதி அத்தியாயத்தில் இருந்து வருகிறார். தனது கட்சியைக் காப்பாற்ற வாய்க்கு வந்தபடிஎதை எதையோ பேசி வருகிறார்.

ஜெ.வுக்கு நாக்கில் சனிபிடித்து ஆட்டுகிறது. நாம் யாரும் அவசரமோ, ஆத்திரமோ பட வேண்டியதில்லை. அவரேதன்னைத் தானே அழித்துக் கொள்வார். மக்களே அவருக்கு விரைவில் பதில் கூறுவர்.

நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதையே திமுக. ஆட்சி செய்து வருகிறது. இப்போது அவையெல்லாம், விட்டுவிட்டு அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவரைப் பற்றியெல்லாம் பேச வேண்டும்என்ற தலையெழுத்தாகி விட்டது. லஞ்ச லாவண்யத்தைக் கற்றுக் கொடுத்தது அ.தி.மு.க. தான் என்றார் அமைச்சர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+