யார் காலிலும் விழ மாட்டேன் ..ஜெ.
மதுரை:
என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதற்காகப், பிரதமர் வாஜ்பாயின் காலிலோ அல்லது தமிழக முதல்வர் கருணாநிதியின் காலிலோவிழ மாட்டேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் அதிமுக சார்பில் நடத்தப்படும் சட்ட உதவி முகாமை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதி, என்னை அரசியல் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், என் மீது பல பொய்வழக்குகளை ஜோடனை செய்து, வழக்குத் தொடர்ந்துள்ளார்.
என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதற்காக நான் கருணாநிதி காலிலோ, பிரதமர் வாஜ்பாய் காலிலோ விழ மாட்டேன்.வேண்டுமென்றே சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தும், வழக்குகள் குறித்தும் பயப்பட மாட்டேன். வழக்குகளின் இறுதித் தீர்ப்பு வரும்வரை தொடர்ந்து போராடுவேன்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் சேர்ந்து கொண்டு தனித் தமிழ் தேசத்தை உருவாக்க வேண்டும் என்று கருணாநிதிநினைக்கிறார் என்றார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.