For Daily Alerts
Just In
எம்.பிக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
மதுரை:
காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியார் அணை பிரச்சனை போன்ற விவகாரங்களில் தமிழக எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்று பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த பா.ம.க. சட்டமன்றத் தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
மத்திய அரசின் பல்வேறு விவகாரங்கள் மற்றும் மாநிலங்கள் தொடர்பான திட்டங்களில் அனைத்து எம்.பி.க்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பல கட்சிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிஇரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.
அரசு அதிகாரிகளிடம், லஞ்ச லாவண்யங்கள் தலை விரித்தாடுவதால், அரசு அமல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களில் 25 சதவீதம்தான் ஏழை எளியமக்களைச் சென்றடைகின்றன என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.
Story first published: Saturday, November 4, 2000, 5:30 [IST]