ஹைதராபாத் அணியிலிருந்து அசாருதீன் நீக்கம்
ஹைதராபாத்:
ஹைதராபாத் ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் அணியிலிருந்து முகம்மது அசாருதீன்நீக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக அசாருதீன் உள்பட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்மீதான குற்றம் சி.பி.ஐ. விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியகிரிக்கெட் வாரியம் ஐந்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட 15நாட்களுக்குத் தடை விதித்துள்ளது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய முன்னாள் சி.பி.ஐ.இயக்குநர் மாதவன் தமைையிலான ஒரு நபர் கமிஷனை இந்திய கிரிக்கெட் வாரியம்நியமித்துள்ளது. இந்த கமிஷன் கொடுக்கும் பரிந்துரைப்படி இவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அசாருதீன் மீது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கமும் நடவடிக்கைஎடுத்துள்ளது. அணியிலிருந்து அவரை நீக்கியுள்ளது. இதுகுறித்து சங்க செயலாளர்சிவ்லால் யாதவ் கூறுகையில், கிரிக்கெட் வாரியம் தனது இறுதி முடிவை அறிவிக்கும்வரை அசாருதீனை அணியிலிருந்து விலக்கி வைக்கிறோம் என்றார்.
தற்போது பெங்களூரில் கர்நாடக அணிக்கு எதிராக நடந்து வரும் ரஞ்சிப் போட்டியில்கலந்து கொண்டுள்ள ஹைதராபாத் அணியில் அசாருதீனும் தேர்வுசெய்யப்பட்டிருந்தார். ஆனால் கிரிக்கெட் வாரியம் விதித்த தடையைத் தொடர்ந்துஅவர் விளையாடவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.