ராஜ்குமாரை விட்டு விடு வீரப்பா ..!
கல்கத்தா:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்யுமாறு சம்பல் பள்ளத்தாக்கில்ஒருகாலத்தில் கொள்ளை, கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாஞ்சம் சிங்வீரப்பனுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
பூலான் தேவியைப் போல, சம்பல் பள்ளத்தாக்கையே ஒருகாலத்தில் கதி கலங்கவைத்தவர் பாஞ்சம் சிங். 100-க்கும் மேற்பட்டகொலைக் குற்றச்சாட்டு இவர் மீதுஇருந்தது. பின்னர் போலீஸில் சரண் அடைந்து இயல்பான வாழ்க்கைக்குத்திரும்பியவர்.
தற்போது 70 வயதாகும் பாஞ்சம் சிங் கல்கத்தாவுக்கு சனிக்கிழமை வந்திருந்தார்.அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடிகர் ராஜ்குமார் சிறந்த கலைஞர்.அனைவருக்கும் பிடித்தவர். அவரை வீரப்பன் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நானும் ஒருகாலத்தில் கொள்ளைக்காரனா, கொலைகாரனாக திரிந்தவன்தான்.இப்போது வீரப்பன் கடைப்பிடித்து வரும் பாதையைத்தான் நானும் கடைப்பிடித்தான்.இப்போது திருந்தி விட்டேன்.
வீரப்பனிடம் நான் விடுக்கும் ஒரே வேண்டுகோள் அனைவரது மனதையும் கவர்ந்தராஜ்குமாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே என்றார் பாஞ்சம்சிங்.