பொருளாதார வளர்ச்சி: ஜப்பானுடன் கைகோர்க்கிறது தமிழ்நாடு
சென்னை:
பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை ஆராய்வதற்கு தமிழகம் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் அடங்கிய உயர் மட்ட கூட்டுநடவடிக்கைக் குழுவை அமைக்க தமிழ முதல்வர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள ஜப்பானிய உயர் மட்டக் குழுவை வரவேற்ற அவர் கூறுகையில், தமிழக பொருளாதார நிலை வளர்ச்சி அடைவதற்காக மாநில அரசு,கடந்த ஒரு வருடமாக, அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
ஜப்பானும், தமிழகமும் இதுதொடர்பாக இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு ஜப்பானின் முழு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
அடுத்த சில மாதங்களில் வர்த்தகத்தில் கூட்டாக செயல்படுவது தொடர்பாக விவாதிக்க தமிழக உயர் மட்டக் குழு ஜப்பானுக்குச் செல்லும். அதே போல்ஜப்பானிலிருந்து ஒரு உயர் மட்டக் குழு, தமிழகத்திற்கு வரும்.
தமிழகத்தில், ஆட்டோமொபைல், பயோடெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றனஎன்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.