ஈராக் வர்த்தகக் கண்காட்சியில் முத்திரை பதிக்கும் இந்திய நிறுவனங்கள்
துபாய்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடக்கும் வர்த்தக கண்காட்சியில் இந்தியாவிலிருந்துகலந்து கொண்ட 85 நிறுவனங்களும் முத்திரை பதிக்கும் விதமாக பங்கேற்றன.
ஈராக்கில் தற்போது ஐ.நா. சபை விதித்துள்ள பொருளாதரத் தடைகள் நீக்கப்பட்டால்,ஈராக்கிலிருந்து இந்தியாவுக்கு ஏராளமான வர்த்தக தொடர்புகள் வரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 10 நாட்களுக்கு இந்தக் கண்காட்சி நடக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார்நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. எண்ணெய், தகவல்தொழில்நுட்பம், எரிவாயு, விவசாய கருவிகள், கல்வி நிறுவனங்கள் போன்றவைகண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.
45 நாடுகளைச் சேர்ந்த 1500 நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. ஐ.நா.பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஈராக்கில் நடக்கும் வர்த்தகக்கண்காட்சியில் இத்தனை நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது ஆச்சரியத்தைக்கொடுத்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications