30 தொகுதிகளில் போட்டியிடுவோம் ..ம.ஜ.தளம்
கோவை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் 30 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர்ஜி.ஏ.வடிவேலு தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்திய நாட்டை, வெளிநாடுகளுக்கு விற்கத் துடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உடந்தையாகஇருக்கும் மாநில அரசைக் கண்டித்தும் சென்னை துறைமுகம் முன்பு மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் வரும் 28 ம் தேதி மறியல் போராட்டம்நடத்தவுள்ளோம்.
இந்த மறியல் போராட்டத்திற்கு முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், தேவே கவுடா ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு,மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
வரும் சட்டசபைத் தேர்தலில் 30 தொகுதிகளில் ஜனதாதளம் போட்டியிடும். நான் எந்தத் தொகுதியிலும் போட்டியிட மாட்டேன். ஜாதி கட்சிகளால்நாட்டுக்குத் தீமைதான் ஏற்படும். அதனால் ஜாதி கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.
தேர்தலுக்குப் பிறகுதான் கூட்டணி ஆட்சி பற்றி முடிவு செய்யப்படும். இருந்தாலும் கூட்டணி ஆட்சிதான் ஜனநாயகத்துக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்றார்ஜி.ஏ.வடிவேலு.












Click it and Unblock the Notifications