15 நாள் குழந்தையுடன் தாய் தற்கொலை
தர்மபுரி:
கிருஷ்ணகிரி அருகே பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை எரித்துக் கொன்று தாயும்தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ளது தென்னன் கோட்டாய் என்ற கிராமம். இங்கு வசித்துவருபவர் கோவிந்தராஜ் (30). இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கணவன்மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் லட்சுமி கர்ப்பமானார். பிரசவம் முடிந்து பெண் குழந்தையும் பிறந்தது.இருப்பினும் தொடர்ந்து கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.குழந்தை பிறந்து 15 நாட்களே ஆன நிலையில், கணவர் சண்டை போட்டதால் லட்சுமிமனம் வெறுத்துப் போனார்.
இதையடுத்து தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போதுஉடனிருந்த குழந்தையும் மண்ணெண்ணெயில் நனைந்து தீயில் கருகியது.
இந்த சம்பவத்தில் குழந்தை அதே இடத்திலேயே இறந்து போனது. லட்சுமி கிருஷ்ணகிரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.