ஜெ. கார் மீது கல்வீச்சு
உசிலம்பட்டி (மதுரை):
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜெயலலிதாவுடைய பாதுகாப்புக்கு வந்தபோலீஸ் கார் உட்பட 6 கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைக்க ஜெயலலிதா திங்கள் கிழமைஇரவு மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு செனறார். இரவு 7.50 மணியளவில்ஜெயலலிதா உசிலம்பட்ட்டியை அடைந்தார்.
அங்குள்ள தேவர் சிலையருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள்உட்பட பலர் அவருக்கு சால்வை அளித்து வரவேற்பளித்தனர்.
அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக சென்ற போலீசார் கார் மீது கற்கள்வீசப்பட்டன. இதில் கார் கண்ணாடி உடைந்தது. வரவேற்பை ஏற்றுக் கொண்டஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பேரையூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது லாரி ஷெட் அருகேஜெயலலிதாவின் காருக்குப் பின்னால் வந்த கார்கள் மீது சரமாரியாக கற்கள்வீசப்பட்டன.
இந்த தாக்குதலில் 4 டாடா சுமோ வேன்கள் மற்றும் ஒரு காரின் கண்ணாடிகளும்நொறுங்கி சிதறின.
போலீசார் அங்கு விரைந்து சென்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கல்வீச்சில்யாரும் காயமடைநதார்களா என்பது குறித்து விவரம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications