For Quick Alerts
For Daily Alerts
Just In
"இந்தியன் ஏர்லைன்சுக்கு மீண்டும் கோளாறு
திருச்சி:
திருச்சி விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இயந்திர கோளாறு ஏற்பட்டதால் சென்னை-ஷார்ஜா இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் நிறுத்தப்பட்டு விட்டது.
திருச்சி விமான நிலைய அதிகாரிகள் இதுகுறித்துக் கூறுகையில், ஐ.சி.968 ரக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சியிலிருந்து, அதிகாலை 4.40 மணிக்குசென்னைக்குச் செல்ல வேண்டும். விமானத்தில் 17 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் விமானம் கிளம்பியது. ரன்வேயில் ஓடத் துவங்கியபோது, விமான என்ஜினில் ஏதோ சப்தம் கேட்பதை விமானி உணர்ந்தார்.இதையடுத்து விமானத்தை மேலே எழுப்பாமல் மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பினார்.
விமானத்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு சென்னைக்குக் கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, November 7, 2000, 5:30 [IST]