வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது
சென்னை:
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடக்க இருப்பதால் இம் மாதம் 11-ம் தேதி மற்றும்25-ம் தேதிகளை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெறற்று வருகிறது. இதன் படிஜனவரி மாதம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர்பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். வெளியூரிலிருந்து குடி பெயர்ந்தவர்களும்தங்கள் பெயர்களை தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு மாற்றிக் கொள்ளலாம்.
வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கானகடைசி தேதி 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு பிறகு தான் இறுதி வாக்காளர்பட்டியல் தயாரிக்கப்படும் அதன்படிதான் வரவிருக்கும சட்டசபைத் தேர்தல்நடைபெறும்.
தமிழகம் முழுவதிலும் உள்ள 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் பெயர்களைவாக்காளர் பட்டியலில் சேர்க்க வரும் 11 மற்றும் 25-ம் தேதிகள் பொது விடுமுறையாகஅறிவித்து தமிழக அரசு திங்கள் கிழமையன்று உத்தரவிட்டது.
வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அன்று பொதுவிடுமுறையாக கருதப்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பகுதியில்இருக்கும் முகாம்களுக்குச் சென்று தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில்சேர்த்துக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.