சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ
சென்னை:
தமிழக சட்டப் பேரவையிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
த.மா.கா. எம்.எல்.ஏவான அப்பாவு, ஒரு ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஆனால், இதற்கு தான்அனுமதி வழங்கவில்லை என்பதை சுட்டிக் காட்டிய சபாநாயகர் பழனிவேல் ராஜன், அவரை இருக்கையில்அமரும்படி உத்தரவிட்டார்.
ஆனாலும் தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாகர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை அவைக் காவலர்கள் வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால், அப்பாவு தொடர்ந்துபிரச்சனையைக் கிளப்பினார். இதையடுத்து அவரை காவலர்கள் இழுத்துச் சென்றனர். எம்.எல்.ஏ. தொடர்ந்துதிமிரிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டு சென்றனர் காவலர்கள்.
இதையடுத்து பிற த.மா.க. உறுப்பினர்கள் அப்பாவுக்கு ஆதரவாக சபாநாயகரிடம் பேசினர். அப்பாவுவைஅவைக்குள் அனுமதிக்க வேண்டும் என த.மா.கா. எம்.எல்.ஏக்கள் கேட்டுக் கொண்டதையடுத்து அவரைஅவைக்குள் வர சபாநாயகர் அனுமதித்தார்.












Click it and Unblock the Notifications