மாறனுக்கு சிகிச்சையளிக்க ஜெர்மன் டாக்டர் வருகை
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில் துறை அமைச்சர் மாறனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில்பணிபுரியும் ஜெர்மன் டாக்டர் வந்துள்ளார்.
லண்டனிலிருந்து வந்துள்ள டாக்டர் பெயர் உல்ரிச்ட் சிக்வார்ட் . அவர் லண்டனிலுள்ள ராயல் பிராம்டன் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர்அடிப்படையில் ஜெர்மனியைச் சேர்ந்தவர்.
சென்னை வந்துள்ள டாக்டர் உல்ரிச்சும், மத்திய சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அப்பல்லோ மருத்துவமனைக்குவியாழக்கிழமை காலை வந்தனர்.
முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அவருக்குஇருதயம் சீராக இயங்க தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.
மாறனின் இதயத்துக்கு ரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர்.
சிரமம் இல்லாமல் அவர் சுவாசிப்பதற்கு செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர் கருவி) பொருத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.