For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூடான்: தாகத்தில் 27 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கார்ட்டூர்:

ஆப்பிரிக்காவில் சூடான் நாட்டில் 27 இளைஞர்கள் தண்ணீர் தாகத்தால் இறந்தனர்.

சூடான் நாட்டில் டோங்கோலா நகரிலிருந்து லிபியாவின் குப்ரா என்ற நகருக்கு பாலைவனம் வழியாக சில இளைஞர்கள், தாங்கள் வாடகைக்கு எடுத்திருந்தபஸ் மூலம் சென்றனர்.

அப்போது வழி தவறி, பாலைவனத்தில் அங்குமிங்கும் பஸ்சில் அலைந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கொண்டு சென்றிருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது.

இதையடுத்து பஸ்சை ஓட்டி வந்தவர் வழி தவறி லிபியா எல்லைப் பகுதிக்குச் சென்றார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து அந்தப் பகுதி வழியே வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இந்த பஸ்சில் உள்ளவர்கள் அனைவரும் தண்ணீர் இல்லாமல் பாலைவனப் பகுதியில்தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அவர் உடனடியாக லிபியா நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதிகாரிகள் அங்கு செல்வதற்குள் 27 இளைஞர்களும் தண்ணீர் தாகம் பொறுக்கமுடியாமல் இறந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X