வியன்டைன் சர்வதேச விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு
வியன்டைன்:
லாவோஸ் தலைநகர் வியன்டைனில் இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் சார்பில் நடைபெறும் கங்கா - மெகாங்க்சுவர்ண பூமி திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இந்நிலையில் அங்குள்ள இந்தகரின் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்தது. இதில் 4 பேர்படுகாயமடைந்தனர்.
சுவர்ணபூமி திட்ட துவக்க விழாவில் கலந்து கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்தி சிங்வியன்டைனுக்கு சென்றுள்ளார்.
இந்த திட்டத்தில் பங்கு பெறும் தாய்லாந்து, இந்தியா, கம்போடியா, லாவோஸ், மியான்மார், வியட்நாம் ஆகியநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வியன்டைன் சென்றுள்ளனர். இந்நிலையில் இங்குள்ள சர்வதேசவிமான நிலையத்தில் குண்டு வெடித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
குண்டு வெடிப்புக்கு ஒன்றரை மணி நேரம் முன்பு வியட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சர் நிகுயென் டீ நியன்சர்வ தேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கிளம்பி சென்ற பிறகு விமான நிலையத்தின் முன் பகுதியில் குண்டு வெடித்தது. இதில் டாக்சி டிரைவர்,விமான நிலையத்தில் துப்புரவு பணிசெய்பவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்துகூட்டம் நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.