For Quick Alerts
For Daily Alerts
Just In
ரயில் என்ஜினில் தீ: பயணிகள் தப்பினர்
மதுரை:
கோயம்புத்தூர் - கொய்லான் ரயில் என்ஜினில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. ரயில் விருதுநகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போதுதீயைப் பார்த்த நபர் ஒருவர் உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து இரவு 11. 05 மணிக்கு ரயில் பேராடி லெவல் கிராஸிங்கில் நிறுத்தப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படையினர்தீயை அணைத்தனர்.
பின்னர் அருகிலிருந்த அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் நடக்கவிருந்து விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும்எந்த வித காயமும் இல்லாமல் உயிர்தப்பினர்.
மின்சாரக் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, November 10, 2000, 5:30 [IST]