ராஜ்குமார் மகன்கள்-மூப்பனார் சந்திப்பு
சென்னை:
நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் இருவர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை வியாழக்கிழமை சந்தித்து பேசினார்கள்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்கள் தாண்டிவிட்டன. அவரை கடத்திச் சென்ற சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து மீட்கும் முயற்சியில்அரசு தூதர் நக்கீரன் கோபாலுடன் ஈடுபட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவரை வன்மையாக தாக்கி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் பேசியதால், காட்டுக்கு வீரப்பனை சந்திக்க போகமாட்டேன் என நெடுமாறன் கூறியிருந்தார்.
இந்நிலையில் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் குமாரும், ராகவேந்திர ராஜ்குமாரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை சந்தித்து பேசினார்கள்.இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.
அதன் பின் நிருபர்களிடம் அவர்கள் பேசுகையில், எங்கள் தந்தை விரைவில் மீட்க வேண்டியதற்கான உதவி செய்ய வேண்டும் என மூப்பனாரை கேட்டுக்கொண்டோம். அவர் ராஜ்குமார் உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே முக்கியமானவர் எனக் கூறினார் என்றனர்.












Click it and Unblock the Notifications