புஷ்ஷை நெருங்குகிறார் கோர்
புளோரிடா:
புளோரிடா மாகாணத்தில் நடக்கும் மறுவாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜ் புஷ்சுக்கும் அல்கோருக்கும் இடையிலானவாக்கு வித்தியாசம் குறைந்து கொண்ட வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து 3 நாட்கள் ஆன பின்னரும் யார் வெற்றி பெற்றது என்பதை முடிவு செய்யமுடியவில்லை. இருவரும் சம பலத்தில் உள்ள நிலையில் புளோரிடாவில் கிடைக்கும் வெற்றி தான் அதிபரை முடிவுசெய்யும் நிலை இருந்தது.
ஆனால், இங்கும் வாக்கு எண்ணிக்கையில் புஷ் வெறும் 1,800 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றதால் மறுவாக்குஎண்ணிக்கை நடக்கிறது. சுமார் 60,00,000 வாக்குகள் திரும்ப எண்ணப்படுகின்றன.
இந்த மறுவாக்கு எண்ணிக்கையில் அல்கோர் முன்பு பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்றுவருகிறார். முன்பு 1,784 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கிய அல்கோர் இப்போது வெளளிக்கிழமை காலைவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் வெறும் 229 வாக்குகள் வித்தியாசத்தில் தான் புஷ்சை விட பின்தங்கியிருக்கிறார்.
தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. புளோரிடாவில் மொத்தம் உள்ள 67 கவுண்டிகளில் 53ல்வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. மேலும் 14 கவுண்டிகளில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.இவற்றை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தான் எண்ணி முடிக்க முடியும் எனத் தெரிகிறது.
இது தவிர வெளிநாடுகளில் வசிக்கும் புளோரிடாவைச் சேர்ந்த அமெரிக்கர்களின் 2,700 வாக்குகள் வந்து சேர சிலநாட்கள் ஆகும்.
இது தவிர புளோரிடாவில் உள்ள பாம்பீச் கவுண்டி பகுதியில் வாக்குச் சீட்டு குழப்பமாக இருந்ததால்பல்லாயிரக்கணக்கானவர்கள் சரியாக வாக்களிக்கவில்லை எனவும் புகார் கிளம்பியுள்ளது. சரியாக வாக்களிக்காதசுமார் 19,120 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
மொத்தம் 270 எலெக்டோரல் காலேஜ் வாக்குகளை வெல்பவர் தான் அடுத்த அதிபராக முடியும். இப்போதுஇருவரும் கிட்டத்தட்ட சம பலத்தில் உள்ளனர். புளோரிடாவில் 25 எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன.இதை யார் வெல்கிறார்களோ அவர் தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி.












Click it and Unblock the Notifications