அரசு பஸ்-கார் மோதலில் 3 பேர் பலி
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே வெள்ளிக்கிழமையன்று ஒரு அரசு பேருந்தும் மாருதி காரும் மோதிக் கொண் ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
நாகார்கோவிலுக்கு அருகே உள்ள பனங்குடி கிராமத்துக்கு அருகில் வெள்ளிக்கிழமையன்று திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்துஒன்றுவேகமாக வந்து கொண்டிருநத்து.
அதே சமயத்தில் கன்னியாகுமரியிலிருந்து மாருதி கார் ஒன்றும் வேகமாக வந்து கொண்டிருந்தது. இவை இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் மாருதி காரில் பயணம் செய்து கொண்டிருந்த காரின் டிரைவர், ஒரு ஆண், ஒரு மூதாட்டி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
அந்த காரில் பயணம் செய்த பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாருதி காரில் பயணம் செய்தவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications