ரஷ்யா-இந்தியா-சீனா கூட்டு சாத்தியமா?
மாஸ்கோ:
ரஷ்யா-இந்தியா-சீனா ஆகியவை இணைந்து ஒரு புதிய முக்கோண அதிகார மையத்தை உருவாக்க வேண்டும் என ரஷ்யாமீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த முக்கோணக் கூட்டு மூலம் தான் அமெரிக்கா-ஐரோப்பாவின் அதிகாரத்தையும் நெருக்குதல்களை சமாளிக்க முடியும் எனரஷ்யப் பிரதமர் மிகேல் காஸ்யனோவ் கூறியுள்ளார். சமீபத்தில் சீனா சென்றிருந்த அவர் சீனாவும் இந்தியாவும் முன் வந்தால் இந்தகூட்டு சாத்தியமாகிவிடும் என்றார்.
இப்படி ஒரு திட்டத்தை முன்னாள் ரஷ்யப் பிரதமர் யெவ்ஜெனி பிரிமகோவ் தான் 1998ம் ஆண்டில் வெளியிட்டார். ஐக்கியநாடுகள் சபையின் அனுமதி பெறாமலேயே அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இராக் மீது விமானத் தாக்குதல் நடத்தியதைஅடுத்து இப்படிப்பட்ட ஒரு முக்கோணக் கூட்டு அமைவது மிக அவசியம் என ரஷ்யா கருத்துத் தெரிவித்திருந்தது.
ஆனால், சீனாவை எப்போதுமே நம்ப முடியாது என்பதால் இந்தியா இதை வரவேற்கவில்லை. சீனாவும் வாய்மூடி மெளனம்காத்து வருகிறது. ஆனாலும் ரஷ்யாவில் இப்போதும் இந்த முக்கோணக் கூட்டு குறித்த நம்பிக்கை பொய்த்துவிடவில்லை.
இந்தியா-சீனா உறவு சீர்பட்டால் தவிர இப்படி ஒரு முக்கோணக் கூட்டு சாத்தியமில்லை.












Click it and Unblock the Notifications