For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருகிறது வங்கிகள் வேலை நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நவம்பர் 15ம் தேதியும் 20ம்தேதியும் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர்.

பொதுத்துறையில் உள்ள வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக இந்தவங்கிகளில் தான் செய்துள்ள 51 சதவீத முதலீட்டை தனியாருக்கு விற்கவும் திட்டமிட்டுள்ளது.

இதை எதிர்த்து வரும் தொழிசங்கங்களுடன் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பேச்சு வார்த்தை நடத்தினார்.ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது.

தனியார்மயமாக்குவது மட்டுமல்லாமல் வங்கி ஊழயர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58ஆகக்குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தவிர ஊழியர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தையும் (வி.ஆர்.எஸ்.)அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர்.

வரும் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்ட மசோதாவை அரசு கொணடுவரஉள்ளது. இது சட்டமாக்கப்பட்டால் வங்கிகளில் அரசின் முதலீடு 51 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாகக் குறையயும்.67 சதவீதப் பங்குகள் தனியாரிடம் சென்றுவிடும். வங்கிகள் தனியார்மயமாகிவிடும்.

இதனால் நவம்பர் 20ம் தேதியும் முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த வங்கி ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அரசின் இந்த முடிவு நாட்டின் நலனுக்கும், இந்தியப் பொருளாதாரத்துக்கும், உழைத்துவரும் வங்கி ஊழியர்களின்நலனுக்கும் எதிரானது எனவும் வங்கிகளில் முதலீடு செய்துள்ள பொதுமக்களின் பணத்துக்கு இனி பாதுகாப்புஇருக்காது எனவும் வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X