For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசாரிடம் கிரிக்கெட் வாரிய விசாரணை தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மேட்ச் பிக்சிங் தொடர்பாக விசாரணை நடத்த, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்துள்ள அதிகாரி மாதவன் தனது விசாரணையை துவங்கினார். முதல்கட்டமாக அசாரூதின், அஜய் சர்மா, மனோஜ் பிரபாகர் ஆகியோரிடம் அவர் சனிக்கிழமை விசாரணை நடத்தினார்.

மேட்ச் பிக்சிங்கில் இந்திய வீரர்கள் 5 பேருக்குத் தொடர்புள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தனது விசாரணை அறிக்கையை மத்தியஅரசிடமும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் சிபிஐ சமர்பித்தது.

சிபிஐயின் இந்தக் குற்றச்சாட்டை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மாதவனைக் கொண்டு விசாரித்து வருகிறது. கே. மாதவன் சிபிஐ முன்னாள் இணைஇயக்குநர்.

அஜய் ஜடேஜா, நாயன் மோங்கியா ஆகியோர் அடுத்த சில நாட்களில் விசாரணை நடத்தப்படும். முன்னாள் சிபிஐ இணை இயக்குநரான மாதவன் தற்போதுகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X