புத்தகங்களுக்கு ஒரு விழா
கோவை:
கோவையில் 50 நாட்கள் புத்தகத் திருவிழா நடக்கிறது. இந்த விழாவில் சினிமா நட்சத்திரங்கள் உட்படஎழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
கோவையில் நவம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது. விஜயா பதிப்பகம்நடத்தும் இந்த விழாவில், 3 ஆயிரத்து 500 சதுர அடிப்பரப்பில், லட்சக் கணக்கான புத்தகங்கள் விற்பனைசெய்யப்படுகின்றன.
கோவையில் முதன்முறையாக ஒரே பதிப்பகம் நடத்தும் புத்தகத் திருவிழா இது தான்.
இந்தப் புத்தகத் திருவிழாவின் முதல் விற்பனையை மாநகராட்சி கமிஷனர் ஹிதேஸ்குமார் மக்வானா துவக்கிவைக்கிறார். பாரதி பட இயக்குநர் ஞானராஜசேகரன் முதல் நூலைப் பெற்றுக் கொள்கிறார்.
புத்தகத் திருவிழா பற்றி விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் வேலாயுதன் கூறுகையில், எங்கள் நோக்கம், மக்களைக்கவர்ந்து புத்தகத்தை விற்க வேண்டும் என்பதல்ல.
இப்போது புத்தகங்களின் விலை, வெறும் காகிதங்களுக்கும் அச்சிற்கும் ஆகும் விலையாக மட்டுமே உள்ளது.புத்தகத்தில் உள்ள கருத்திற்கு விலை இல்லை. இந்த கருத்திற்கும் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
எக்காலத்திற்கும் புத்தகங்களுக்கு வாசகர்கள் உண்டு. இத்தகைய புத்தகங்களைத் தேர்வு செய்து அவர்களுக்குஅளிக்க வேண்டியது பதிப்பாளர்களின் கடமை. இதற்காகவே புத்தகத் திருவிழாவை ஆண்டு தோறும் நடத்திவருகிறோம்.
இந்த விழாவில் புத்தகங்களை விற்பனை செய்வது மட்டும் நோக்கமல்ல.
இலக்கியவாதிகளையும், கவிஞர்களையும் பங்கு பெறச் செய்வோம். அதோடு கலை இலக்கிய வளர்ச்சி பெற வழிஏற்படும். மேலும், இங்கு வரும் வாசகர்களுக்கு தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications