மழை வேண்டி கழுதைக்குத் திருமணம்
ஆனால், இன்று நாட்டிலே நிலவுகிற சூழ்நிலையின் ஒரு பிரதிபலிப்புதான் - இந்த கிரிக்கெட் சூதாட்டம் என்பதைநாம் மறந்துவிடக் கூடாது. எவ்வகையிலாவது - அது எவ்வளவு தவறான வழியாக இருந்தாலும் - பணம்பண்ணிவிட வேண்டும் என்ற மனோபாவம் இன்று பெரிதாகப் பரவி வருகிறது.
அரசியல்வாதிகள் திருடுகிறார்கள் ; சிலர் சிக்க, பலர் தப்ப - சிக்கியவர்களும், தப்பியவர்களும், சிக்கஇருப்பவர்களும், தலைவர்களாகவே ஏற்கப்படுகிறார்கள்.
அவர்களுடைய அந்தஸ்திற்கு ஒரு பழுதும் நேர்ந்து விடுவதில்லை. அதிகாரிகள் திருடுகிறார்கள் ; பலர் பதவியில்தொடர, சிலர் வழக்குகளைச் சந்திக்க, சிலர் அதைவிட அநியாயமாக தண்டிக்கப்பட, , சிலர் அதைவிடஅநியாயமாக தப்பித்துவிட, ஆளும் கட்சியை நம்பினோர் கைவிடப்படார் என்ற அரசியல் ஆன்மீக உண்மையைஉணர்ந்த அதிகாரிகள், இன்னும் திருடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பல டாக்டர்கள் தங்களுடைய புனிதமான தொழிலை வெறும் வர்த்தகமாக மட்டுமல்ல - பகல் கொள்ளையாகவேமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த டாக்டர்கள் என்ற நோயினால் பீடிக்கப்பட்டு சமூகம்தான் தவிக்கிறதே தவிர,அந்த டாக்டர்களுக்கு அவர்களுடைய மோசடி வியாபாரம் நன்றாகவே நடக்கிறது.
நிதி நிறுவனம் நடத்தியவர்களில் பலர் முகமூடி அணியாத கொள்ளைக் காரர்களாகவே மாறி விட்டனர். நீதித்துறையிலும் கூட ஊழல் என்கிற திருட்டு பரவி விட்டது. இன்று எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல,ஆன்மீகவாதிகள் என்ற பெயரில், முற்றும் துறந்தவர்கள் என்ற வேடமணிந்த சிலர், தர்ம நியாயத்தையும் துறந்து,மோசடி செய்து பணம் குவிக்கிறார்கள்.
இப்படி சமுதாயத்தின் பல அங்கங்களும் இந்த பண நோய்க்கு பலியாகிக் கொண்டிருக்கிற வேளையில் - அந்தநோய் விளையாட்டு மைதானத்தையும் தீண்டியிருப்பதில், வியப்பதற்கு என்ன இருக்கிறது?
இதில் இன்னமும் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், பத்திரிக்கையாளர்களுக்கு பங்கு உண்டா, வேறுவிளையாட்டுகளில் இது மாதிரி எதுவும் நடப்பதில்லையா - என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்போதுதான் உண்மையான வியப்பிற்கு இடம் ஏற்படும்.
தவறுகள் எல்லா சமுதாயங்களிலும் நடக்கத்தான் செய்யும். அவற்றை ஒரு சமுதாயம் எப்படி அணுகுகிறதுஎன்பதைப் பொறுத்துதான், தவறுகள் மலிவதோ அல்லது குறைவதோ நடக்கும்.
மிகப் பெரும்பாலான மனிதர்கள், தண்டனைக்கு பயந்துதான் குற்றங்களைச் செய்யாமல் இருக்கிறார்கள். நமதுசமுதாயத்திலோ, பிரபலஸ்தர்களைக் கண்டால், சட்டம் வழி விட்டு ஒதுங்கி நிற்கும் - என்பது எழுதப்படாதவிதிமுறையாக இருந்து வந்திருக்கிறது.
பிறகு என்ன பயம்?குளிர்விட்டுப் போன சமுதாயமாகி விட்டோம். சட்டத்தின் காற்று பலமாக வீசினால்தான்நமக்கு குளிர் உண்டாகும் ; குற்றங்கள் குறைய அதுதான் வழி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications