சியோரா லியோனில் போர்நிறுத்தம்...அரசு அறிவிப்பு
ப்ரீடவுன்:
சியோரா லியோனில் போர் நிறுத்தம் செய்ய அரசு ஒத்துக் கொண்டுள்ளதாக ரேடியோ செய்திகள் தெரிவிக்கின்றன.
சியோரா லியோனில், கடந்த 9 வருடங்களாக ராணுவ வீரர்களுக்கும், புரட்சிகர ஐக்கிய முன்னணி படையினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவருகிறது. இதனால் நாளுக்கு நாள் ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்படுகின்றன.
சமரசம் செய்வதற்காக ஐ.நா. பலமுறை முயற்சி செய்தும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சியோரா லியோனில் மீண்டும் அமைதியைஏற்படுத்தும் நோக்கத்தில் போர்நிறுத்தம் செய்வது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரிய தலைநகர் அபுஜாவில், புரட்சிகர ஐக்கிய முன்னணி மற்றும் அரசுத்தரப்பு பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன்படி சனிக்கிழமைமுதல் போர்நிறுத்தம் செய்யப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தம் நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த மே மாதம் அரசுத் தரப்பு பிரதிநிதிகளும், புரட்சிகர ஐக்கிய முன்னணியினரும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications