மாறன் குணம் பெற முஸ்லிம்கள் பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முரசொலி மாறன் உடல் நலம் பெற வேண்டி 16 ஆயிரம் மசூதிகளில் இஸ்லாமிய மக்கள் பிரார்த்தனை நடத்தினர்.
இது குறித்து அகில இந்திய முஸ்லிம் ஷரியத் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நலக் குறைவை கண்டு தமிழக மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள்அதிக கவலை அடைந்துள்ளனர்.
அகில இந்திய ஷரியத் வாரியத்தின் தமிழக அமைப்பு கவலை அடைந்துள்ளது. தமிழக முஸ்லிம்கள்வெள்ளிக்கிழமையன்று விசேஷ தொழுகையின் போது கூட்டுப் பிரார்த்தனை முலமே அல்லது தனியாகவோமாறனின் உடல் நலம் பூரண குணம் அடைய வேண்டி தமிழகத்தில் உள்ள 16 ஆயிரம் மசூதிகளில் பிரார்த்தனைநடத்தப்பட்டது.
மாறனின் உடல் முழுமையான அளவில் சுகம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கப்பட்டது. அவர் விரைவில் குணம்பெற்று வீடு திரும்புவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications