சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
நவம்பர் 6-ம் தேதி இந்தக் கூட்டத் தொடர் துவங்கியது. கடந்த 7 நாட்களாக நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரங்கராஜன்குமாரமங்கலம், பாரத் ரத்னா சி.சுப்ரமணியம், மாநில அமைச்சர்கள் நாஞ்சில் மனோகரன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர்பி.என்.வல்லரசு ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவாகரம் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்தன. இதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, பிரச்சினை பெரிதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேல்தான் காரணம் என்றுகூறினார்.
இதுதவிர, சட்டசபையில், 2000-2001ம் ஆண்டுக்கான துணை நிதி நிலை அறிக்கைக்கு சபை ஒப்புதல் கொடுத்தது. மற்றும் பலமசோதாக்களும் கொண்டு வரப்பட்டன.
யு.என்.ஐ.