வாஜ்பாயை வாழ்த்திய இளந்தளிர்கள்
டெல்லி:
மூட்டு அறுவை சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பிய பிரதமர் வாஜ்பாயை திங்கள்கிழமை பள்ளிக்குழந்தைகள், அவர் வீட்டுக்குச் சென்று, வாழ்த்துக்கூறினர். அவர்களுக்கு நடந்து காட்டி தான் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார் வாஜ்பாய்.
டெல்லி சர்தார் படேல் வித்யாலயா பள்ளி குழந்தைகள் தங்களது பள்ளித் தலைமை ஆசிரியர் மம்தா சர்மா தலைமையில் ரேஸ் கோர்ஸ் ரோட்டிலுள்ளபிரதமரின் இல்லத்துக்குச் சென்றனர்.
பிரதமரைப் பார்த்ததும் ஒரு குழந்தை உங்களால் இப்போது நடக்க முடியுமா? என்று கேட்டது. உடனே பிரதமர் சிரித்துக் கொண்டு, அந்தக்குழந்தைக்காக சிறிது தூரம் நடந்து காட்டினார்.
பின்னர், விரைவில் குணம் பெற வேண்டும் என்று எழுதப்பட்ட வாழ்த்து அட்டைகள், வாஜ்பாய்க்காக எழுதப்பட்ட கவிதைகள் ஆகியவற்றைபிரதமரிடம் பள்ளிக் குழந்தைகள் கொடுத்தனர்.
குழந்தைகளிடம் பின்னர் பிரதமர் வாஜ்பாய் பேசுகையில், இன்றைய பள்ளிக் குழந்தைகள் தான் நாளைய இந்தியா. நீங்கள் வளர்ந்ததும் நாட்டுப்பற்றுடையவர்களாக வாழ்ந்து சிறந்த இந்தியா உருவாக பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரதமர் வாஜ்பாய், கடந்த அக்டோபர் 10 ம் தேதி மும்பையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.