தப்புக் கணக்குப் போடாதீர்கள் .. தனுஷ்கோடி ஆதித்தன்
ஈரோடு:
தமிழ் மாநிலக் காங்கிரசை சாதாரணக் கட்சியாக நினைக்க வேண்டாம், நாங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலையில் இல்லை என முன்னாள்அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடிஆதித்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கும். தனித்து நின்று போட்டியிட்டாலும், கூட்டணி ஆட்சிஅமைந்தால் அந்தக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் மூப்பனார் முடிவு செய்வார். அதற்குமுன் மதச்சார்பற்ற கட்சிகளுடன் மகாக் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். மதச் சார்பற்றவர்களின் ஓட்டுகள்சிதறிவிடக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் பிரியும் முன்பு இருந்த காங்கிரசை விட இப்போது த.மா.கா., வலிமையான கட்சியாக உள்ளது. கட்சி வளர்ச்சி பெற்றுள்ளது.எனவே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைை சாதாரணக் கட்சியாக நினைக்க வேண்டாம். தப்புக் கணக்குப் போட வேண்டாம். நாங்கள் யாரிடமும்கையேந்த வேண்டிய நிலையில் இல்லை. கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
ஊழல், ஊழல் என எம். ஜி.ஆர்., கருணாநிதியை விரட்டினார். ஜெயலலிதாவை ஊழல், ஊழல் என கருணாநிதி விரட்டினார். இப்போது கருணாநிதியின்ஆட்சியில் ஊழல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கருணாநிதி அறிவியல்பூர்வமாக ஊழல் செய்து வருகிறார். கொப்பரைத் தேங்காய் கொள்முதலில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. இந்தஊழல் குறித்து ஆய்வு நடத்தி மேலிடத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளோம்.
உழவர் சந்தை வெறும் கண்துடைப்பாக இருந்து வருகிறது. இப்போது தக்காளி விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை உழவர்சந்தை மூலம் ஏன் குறைக்க முடியவில்லை?
தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. மூடிய மில்கள் திறக்கப்படவில்லை. நெசவாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனை வலியுறுத்திதொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார் தனுஷ்கோடி ஆதித்தன்.