இன்று சார்க் மாநாடு
கொழும்பு:
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான "சார்க் அமைப்பின் மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, இலங்கை, நேபாளம் ஆகிய 7 நாடுகள் சார்க் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
கடந்த ஆண்டு, நவம்பரில் சார்க் உச்சி மாநாட்டை நேபாளத்தில் நடத்துவது என முன்னர் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் ராணுவப் புரட்சிநடந்ததால், சார்க் மாநாட்டைத் தள்ளி வைக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இதையடுத்து காலவரையின்றி மாநாடுஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில், 3 மாநாடு திங்கள்கிழமை நடக்கிறது. இந்த மாநாட்டை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்லட்சுமண் கதிர்காமர் துவக்கி வைக்கிறார். சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை இணைச் செயலர் மீரா சங்கர் கலந்து கொள்கிறார்.