அமெரிக்க விமானங்கள் மோதல்
டோக்கியோ:
ஜப்பானில், இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் மோதிக் கொண்டன. பைலட்டுகள்,பாராசூட்கள் மூலம் கீழே குதித்துத் தப்பினர்.
ஜப்பான் கடல் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு அமெரிக்க எப்-16 போர்விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. இரண்டு விமானங்களும் டோக்கியோவிலிருந்து350 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிசாவா விமானதளத்திலிருந்து வந்தன. இந்த விமானதளத்தை அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வருகிறது.
ஜப்பான் கடல் அருகே வந்து கொண்டிருந்தபோது, இரு விமானங்களும் மோதிக்கொண்டன. இதையடுத்து விமானங்களின் பைலட்டுகள், பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.இவர்களைப் பார்த்த ஜப்பான் பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக விரைந்து சென்றுபைலட்டுகளை மீட்டனர்.
ஜப்பானின் வடக்கில் உள்ள தீவான ஹொக்கைடோவில் உள்ள மாட்சுமே என்ற நகருக்குமேலே, கடலில் இந்த மோதல் நடந்ததாக ஜப்பான் பாதுகாப்புப் படை கூறியது.












Click it and Unblock the Notifications